×

வேட்டி சேலை இறக்கும் பணி மளிகை கடை பூட்டை உடைத்து திருட்டு

மன்னார்குடி, டிச. 18: திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (36). இவர் கடை வீதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 14 ம் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்ற கனகராஜ் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அடையாளம் தெரியாத நபர் கடை பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.2500ஐ திருடி சென்றது தெரிய வந்தது.அதில் முத்துப்பேட்டை ஆசாத் நகரை சேர்ந்த முகமது அசாருதீன் (17) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vetti saree ,
× RELATED திருவிக நகர் தொகுதி திமுக நிர்வாகிகளுக்கு வேட்டி சேலை