×

குளித்தலை அருகே திம்மாச்சிபுரத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மழைநீர் சேமிப்பு உறுதிமொழி

குளித்தலை, டிச. 18: கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் கே.பேட்டை ஊராட்சி திம்மாச்சிபுரத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி நீர் மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து ஜல் சக்தி அபியான் திட்டத்தில் கிராமப்புறங்களில் புதிய நீர்வழி உருவாக்குவது குறித்து ஆலோசித்து அதனைத் தொடர்ந்து மழை நீரை சேமிப்பது குறித்து நீர் மற்றும் சேமிப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி கதிர்வேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விமலா விஜயகுமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சக்திதாசன் நீர் மற்றும் நீர்சேகரிப்பு குறித்து உறுதிமொழி வாசிக்க ஊராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திருப்பி கூறி உறுதிமொழி ஏற்றனர். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழரசி, அருணாசலம், செந்தில், சித்ரா, சரவணன், ஜோதி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thimmachchipuram ,Kulithalai ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...