×

குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலில் 20ம் தேதி ஆருத்ரா தரிசன விழா

குளித்தலை, டிச. 18: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர் மலைக்கு அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புரதான கோவிலான சிவாயம் சிவபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா வரும் 20ம் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இத்திருக்கோவிலில் உள்ள நடராஜ பெருமான் பேரழகு உடையவர். இவருடைய ஆருத்ரா தரிசன காட்சி கண்கொள்ளா காட்சியாகும். சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்க இயலாதவர்கள் இங்கு வந்து தரிசித்து பலனை பெறலாம் என்பது ஐதீகம். விழாவினையொடடி 20ம் தேதி காலை 6 மணிக்கு மகா அபிஷேகமும், அதனை தொடர்ந்து ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. விழாவையொட்டி நாதஸ்வரக் கச்சேரிகள், தேவார திருமுறை இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது.

முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மாணிக்கவாசகர் புறப்பாடும், 8 மணிக்கு சந்திரசேகர சுவாமி நூற்றுக்கால் மண்டபத்தில் ஊஞ்சல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு பிச்சாடன மூர்த்தி நந்தவனம் அழித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் சூரிய நாராயணன், அலுவலர்(ஆட்சி) சிவப்பிரகாசம் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Arudra Darshan Festival ,Sivayam Sivapuriswarar Temple ,Kulithalai ,
× RELATED குளித்தலை பெரியார் பாலம் அருகே ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகை பறிமுதல்