×

வேடந்தாங்கல் சரணாலய சுற்றளவை குறைக்கும் திட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி: அன்புமணி டிவிட்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 5 கி.மீட்டரில் இருந்து 3 கி.மீட்டராக குறைக்கும் முடிவு கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சரணாலயத்தைக் காக்கும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதினேன். அந்த முயற்சிகளுக்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

‘‘கொடைக்கானல் அடுத்த பாச்சலூரில் உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு மாணவி எரித்துக்  கொல்லப்பட்டிருக்கிறார். இதுபோல் சிறுமிகள் மர்மமாக படுகொலை  செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் விரைந்து கண்டறியப்பட்டு,  அவர்களுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை  எடுக்க வேண்டும்’’ என மற்றொரு அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Tags : Anbumani Dwivedi ,
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...