×

தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வா?: ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றாலும் மீண்டும் ஒரு போட்டி தேர்வென்பது ஜனநாயகத்திற்கு முரணான அறிவிப்பு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறை ஒன்றை கடந்த காலத்தில் அறிவித்தது ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்போருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது.

ஆனால், இன்னும் பழைய நடைமுறையே தொடருவது மனவேதனையளிக்கிறது.  2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் எட்டு ஆண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் ஏற்படக்கூடிய ஆசிரியர் காலிப்பணியிடங்களில் முழு முன்னுரிமை அளித்து பணி வழங்கி வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Tags : Teachers' ,Union ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்