×

பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மெரினா கடற்கரைக்கு வந்த சிறுமியை கடத்தி பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் கைது

தண்டையார்பேட்டை, டிச.17: சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 11ம் தேதி பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இச்சிறுமியை, பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்ேபரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மெரினா கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் அழுதபடி சுற்றித்திரிந்த ஒரு சிறுமியை, பொதுமக்கள் மீட்டு ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், ஏழுகிணறு பகுதியை சேர்ந்த மாயமான சிறுமி என தெரியவந்தது. இதையடுத்து, பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியை ஒப்படைத்தனர். அங்கு, சிறுமியிடம் போலீசார் விசாரித்தபோது, ‘வீட்டைவிட்டு வெளியேறி நான் மெரினா கடற்கரைக்கு வந்தேன். அங்கிருந்து எங்கு செல்வது என தெரியாமல் இருந்தேன். அப்போது, அங்கு வந்த பள்ளிக்கரணையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மூசா கலிமுல்லா (34), எனக்கு அடைக்கலம் தருவதாக கூறி, ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், என்னை மீண்டும் மெரினா கடற்கரை அழைத்து வந்து விட்டுவிட்டு, மாயமானார்,’’ என கூறியுள்ளார்.

இதையடுத்து, ஆட்டோ டிரைவர் மூசா கலிமுல்லாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மற்றொரு சம்பவம்:  காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (24), சென்னை ராஜமங்கலம் பகுதியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அருண்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : Marina Beach ,
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...