×

கோவில்பட்டியில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, டிச.17:  வங்கி ஊழியர்களுக்கு ஆதரவாக கோவில்பட்டியில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சி செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து நேற்றும், இன்றும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவில்பட்டியில் எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் நேற்று மதிய உணவு இடைவெளியின் போது ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளைச் சங்க தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் நெல்லை கோட்ட மூத்த கவுரவ உறுப்பினர் தேவபிரகாஷ் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி கிளைச் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிளைச் செயலாளர் லெனின்கிருஷ்ணசாமி செய்திருந்தார். கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags : LIC ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை