×

வள்ளியூரில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு விழா

வள்ளியூர், டிச. 17: வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகே கூட்டுறவு நகைகடன் வங்கி வளாகத்தில் புதிதாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட கூட்டுறவு மருந்தகம் திறப்பு விழா நடந்தது. தமிழகத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு வளாகங்களிலும் அமைக்கப்பட்ட கூட்டுறவு மருந்தகங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகே கூட்டுறவு நகைகடன் வங்கி வளாகத்தில்  புதிதாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட கூட்டுறவு மருந்தகம் திறந்துவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விழாவில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஸ்,  வள்ளியூர் யூனியன் சேர்மன் சேவியர் ராஜா ஞானதிரவியம் ஆகியோர் குத்துவிளக்குகேற்றி முதல் விற்பனையை துவக்கிவைத்தனர்.

இதில் திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட  கவுன்சிலர் பாஸ்கர், சாந்தி ஜான்சன்ரூபா, ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் மவுலின் இசக்கி பாபு, வள்ளியூர் நகரச் செயலாளார் சேதுராமலிங்கம், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர்  அமைச்சியார், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி ரமேஷ், மாவட்டப் பிரதிநிதி  காதர்மைதீன், அன்பரசு, வடக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் சிவாராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், பேரூர் திமுக பெஸ்கி, நிர்வாகி நம்பி, தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி லட்சுமணன்,  இளைஞர் அணி வள்ளியூர் ஒன்றிய அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், பேரூர் அமைப்பாளர் தில்லைராஜா, வார்டு செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Pharmacy Opening Ceremony ,Valliyoor ,
× RELATED நெல்லை, தென்காசி, வள்ளியூர்...