×

பொட்டல்புதூரில் ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்

கடையம், டிச.17: கடையம் அருகே பொட்டல் புதூர் பகுதியில்  தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு பிரிவு எஸ்ஐ மாதவன், தனிப்பிரிவு எஸ்ஐசேகர், சிறப்பு எஸ்ஐ முருகன், ஆழ்வார்குறிச்சி எஸ்ஐ முத்துகிருஷ்ணன் ஆகியோர் பொட்டல் புதூர் பகுதியில் சோதனை நடத்தினர். இதில் பொட்டல்புதூர் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகமது சுல்தான் மகன் மீரான் மைதீன் (32),  செக்கடி தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரான் மகன் முகமது இசாக் (35) ஆகியோரது வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மீரான் மைதீன், முகமது ஈசாக்கும் பெங்களூர் சென்று பெரிய டிராவல் பேக்குகளில் குட்கா கடத்தி வந்து விற்பதும் அம்பலமானது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Gutka ,Pottalputhur ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது