×

குளித்தலையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பணி அரங்கம்

குளித்தலை, டிச. 17: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் பணி அரங்கம் குளித்தலை அண்ணா சமுதாய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் நாகலட்சுமி தலைமையேற்று திட்டம் குறித்து விளக்கம் அளித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் கவுரி அனைவரையும் வரவேற்றார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வினோதினி விளக்க உரை ஆற்றினார். இக்கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் மற்றும் போஷன் அபியான் திட்டத்தின் இலக்கினை அடைய ஊராட்சி மன்ற தலைவர்களின் பங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இத்தட்டத்தின் சார்பில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பார்வையிட்டு அதற்கான விளக்கங்களையும் கேட்டு அறிந்து சென்றனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மேற்பார்வையாளர் அஞ்சலை மதி நன்றி கூறினார்.

Tags : Bath ,
× RELATED அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி கிடையாது: பிரதமர் மோடி