×

விராலிமலையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

விராலிமலை, டிச.17: விராலிமலையில் கள்ளச்சாராயம், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணிக்கு விராலிமலை தாசில்தார் சரவணன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் கண்ணா கருப்பையா பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் மற்றும் மது பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் பங்கேற்ற ஏந்தி சென்றனர். விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி சோதனைச்சாவடி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கடைவீதி வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றோர் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முழக்கமிட்டு சென்றனர். இதில் தனி வட்டாட்சியர் வளர்மதி(சமூக பாதுகாப்புத் திட்டம்), மண்டல துணை தாசில்தார் சாந்தா, வருவாய் ஆய்வாளர் சுரேந்திரன், சேதுராமன், மணிமேகலை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் தாலுகா அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Viralimalai ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா