×

ஏடிஎம் கொள்ளை முயற்சியில் கொலை சம்பவம் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உதவிய எஸ்எஸ்ஐ, காவலருக்கு வெகுமதி

திருவாரூர், டிச.17: திருவாரூர் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் நடைபெற்ற கொலையில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உதவிய எஸ்.எஸ்.ஐ சிவகுருநாதன் மற்றும் போலீஸ் சுவாமிநாதனை பாராட்டி டிஜிபி சைலேந்திரபாபு வெகுமதி வழங்கினார். உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் போலீசாருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நேற்று திருச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. மேலும் மத்திய மண்டலத்தில் நடைபெற்ற குற்ற சம்பவம் மற்றும் பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை பாராட்டி டிஜிபி சைலேந்திரபாபு வெகுமதி வழங்கினார். அதன்படி திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுக்கா கூடூர் கிராமத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை முயற்சியின்போது அதனை தடுக்க முயன்ற கட்டிட உரிமையாளர் கொள்ளையர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை இரவோடு இரவாக பிடிக்க உதவிய எஸ்.எஸ்.ஐ சிவகுருநாதன் மற்றும் காவலர் சுவாமிநாதன் ஆகியோரை பாராட்டி டிஜிபி சைலேந்திரபாபு வெகுமதி வழங்கினார்.

Tags : SSI ,
× RELATED எஸ்எஸ்ஐயை தாக்க முயன்ற ரவுடி கைது