×

திருவலம் அருகே மதுபானம் பதுக்கி விற்ற முதியவர் மீது வழக்கு

திருவலம், டிச.17: திருவலம் அருகே மதுபானம் பதுக்கி விற்ற முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவலம் அடுத்த சுகர்மில் வேல் நகர் பகுதியில் நேற்று மாலை திருவலம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணி(62) என்பவர் வீட்டின் பின்புறம், அரசு மதுபானம் பதுக்கி அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், வீட்டின் பின்புறம் உள்ள புதரில் அரசு மதுபானம் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து 3 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து மணி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruvalam ,
× RELATED திருடிய 5 பைக்குகளுடன் 2 வாலிபர்கள் கைது திருவலம் அருகே