×

ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே போக்குவரத்து தொடக்கம்

ஊத்துக்கோட்டை: பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் உள்ள ஒதப்பை கிராமத்தின் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தரைப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை போக்குவரத்து கடந்த ஒரு மாதமாக முடங்கியது. இதனால், ஒதப்பை பாலம் சேதத்தால் பல்வேறு பணிகளுக்காக மாவட்ட தலைநகரான திருவள்ளூர் செல்ல முடியாமல் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பூண்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டதால் நேற்று மாலை 4.30 மணி முதல் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே ஒரு மாதத்திற்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags : Uthukkottai - ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...