×

சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் லோடு ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது

திருச்சி, டிச. 16: திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் பகுதி வழியே மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் அரியமங்கலம் விஏஓ சூசை ஆரோக்கியராஜ் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தார். அந்த சோதனையில், 28 சிமென்ட் மூட்டை சாக்குகளில் மணல் இருப்பது தெரியவந்தது. விசாரித்தபோது, காவிரி கரையில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து அரியமங்கலம் போலீசில் சூசை ஆரோக்கியராஜ் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து நூதன முறையில் மணல் கடத்திய திருவானைக்காவல் வடக்கு தெருவை சேர்ந்த ஹரிஹரன்(33) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Namperumal lorry ,
× RELATED தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள்,...