×

சாத்தூர் நலவாரியத்தில் சிறப்பு முகாம்

சாத்தூர், டிச. 16: சாத்தூரில் ராம் பொது சேவை மையத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய இலவச சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தீப்பெட்டி மற்றும் பட்டாசு மற்றும் ஏனைய தொழில் சார்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இ-சேர் இணையதளத்தில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்தனர். இந்த முகாமில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மோகன் குமார், மாவட்ட பொது இ-சேவை மைய மேலாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தினார். அத்துடன் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுடககு அடையாள அட்டையையும் வழங்கினார்.

Tags : Sattur Welfare ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...