×

ராஜூக்கள் கல்லூரியில் பெண்களுக்கான பாலின அச்சுறுத்தல் குறித்த பயிற்சி

ராஜபாளையம், டிச. 16: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் பெண்களுக்கான பாலின அச்சுறுத்தல் குறித்த புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தலின்படி மத்திய அமைச்சரக கல்விசாரா துறையின் கீழ் பாலின அச்சுறுத்தலில் இருந்து பெண் குழந்தைகளை காப்பது குறித்த புத்தாக்க பயிற்சி துறைசார் வகுப்பு பொறுப்பாளர்களாக விளங்கும் பெண்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சிக்கல்கள் குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் அவலங்களை எவ்வாறு மீட்டுருவாக்கம் செய்து சிறப்பானதொரு சூழலை அமைக்க வேண்டும் என்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் கலாவதி தொகுத்து வழங்கினார். வணிகவியல் துறை பேராசிரியர் மஞ்சுளா காயத்ரி வரவேற்புரையாற்றினார். மாணவி நவதர்ஷனா நன்றியுரை கூறினார்.

Tags : Rajouri College ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது