×

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்த வாலிபர்

பள்ளிபாளையம், டிச.16: பள்ளிபாளையம் புதிய காவிரி பாலத்தில், நேற்று மாலை வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆற்றை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென ஆற்றில் குதிக்க முயன்றார்.
அப்போது அங்கிருந்த சிலர் தடுக்க முயன்றனர். ஆனால், அவர் தடுப்பு சுவரை தாண்டி ஆற்றில் குதித்து மூழ்கினார். இது குறித்த தகவலின்பேரில், பள்ளிபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் மிதவைகள் மற்றும் மீனவர்களின் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. சிறிது நேரத்தில் கரையோர பகுதியில் வாலிபரின் சடலம் கிடந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cauvery River ,
× RELATED வானில் ஒரு வர்ணஜாலம் நெரூர்-உன்னியூர்...