×

கள்ளக்காதலியுடன் கருத்து வேறுபாடு டெய்லர் தூக்கிட்டு தற்கொலை

திருமுருகன்பூண்டி, டிச.16: திருப்பூர், பாண்டியன் நகர் சத்யாகாலனியில் வசித்து வந்தவர் ஆறுமுகம் (எ) குமார் (44). திருமணமாகவில்லை. இவர், பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். அங்கு மோகனா (36) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
அந்த பெண் கடந்த 2 வருடங்களாக கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

பின்னர் இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மோகனா, இவரை விட்டு தனியாக சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஆறுமுகம், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Taylor ,
× RELATED டெய்லர் தூக்கிட்டு தற்கொலை