×

பாளை மற்றும் மேலப்பாளையம் துணை மின்நிலையங்களில் வருகிற 18ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள்

நெல்லை, டிச.16: பாளை மற்றும் மேலப்பாளையம் துணை மின்நிலையங்களில் வருகிற 18ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதன் காரணமாக விஎம் சத்திரம், கட்டபொம்மன்நகர், ரகுமத்நகர், நீதிமன்ற பகுதிகள், சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்க பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்ைத பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலமாணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம்,செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, பிஎஸ்என் கல்லூரி, பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ்நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி ஆகிய பகுதிகளில் 18ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றி மின்பாதையை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும் என நகர்புற விநியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்துள்ளார்.

Tags : Palai ,Melappalayam ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...