×

நாளை நடக்கிறது பட்டா திருத்த முகாம்கள்

நாகர்கோவில், டிச.16: குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் பட்டா திருத்த முகாம்கள் நடைபெற உள்ளது. டிசம்பர் 17ம் தேதி தேரேகால்புதூர், காட்டுப்புதூர் கிராமங்களுக்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்திலும், ரீத்தாபுரம், செம்பொன்விளை கிராமங்களுக்கு செம்பொன்விளை கிராம நிர்வாக அலுவலகத்திலும், உண்ணாமலைக்கடை, கொல்லஞ்சி கிராமங்களுக்கு கொல்லஞ்சி கிராம நிர்வாக அலுவலகத்திலும், தும்பக்கோடு ஏ கிராமத்திற்கு திருநந்திக்கரை கூட்டுறவு சங்கத்திலும், குளப்புறம், மெதுகும்மல் கிராமங்களுக்கு குளப்புறம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் பட்டா திருத்த முகாம்கள் நடைபெறுகிறது. இந்த பட்டா திருத்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags : Patta ,
× RELATED போடி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு..!!