×

மணல் கடத்தியவர் குண்டாசில் கைது

பேரையூர், டிச. 15: பேரையூர் அருகேயுள்ளஅணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(எ)அன்வர்ராஜா(40). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மண் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, தேனி சிறைச்சாலையில் இருந்துள்ளார். இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவின்படி, எஸ்.பி பாஸ்கரன் ஆலோசனையின்படியும், பேரையூர் டிஎஸ்பி சரோஜா, இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் சின்னச்சாமி(எ)அன்வர்ராஜா மீது குண்டர் சட்டம் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், இந்த வழக்கில் தேனியிலிருந்த அன்வர்ராஜா மதுரை மத்திய சிறைச்சாலையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

Tags : Kundas ,
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது