மதுரை, டிச. 15: ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இரங்கல் கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கல்லூரி நிதிக்காப்பாளர் ஷீலா, தேர்வுக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் மார்டீன் டேவிட், முப்படை, என்சிசி, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.