×

(திருப்பத்தூர்) ரயில் மோதி 2 வாலிபர்கள் பலி காட்பாடி, திருப்பத்தூர் அருகே

ஜோலார்பேட்டை, டிச. 15: காட்பாடி, திருப்பத்தூர் ரயில் நிலையங்கள் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 வாலிபர்கள் ரயிலில் சிக்கி பலியாகினர். வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள யார்டு பகுதியில் கடந்த 12ம் தேதி இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மது போதையில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் வேலூர் விருப்பாட்சிபுரம் காந்தி நகரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் சரவணன்(31) என்பது தெரியவந்தது.  அதேபோல் திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 23 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் திருப்பத்தூர் மருத்துவர் நகர் பகுதியை சேர்ந்த பிச்சாண்டி மகன் பிரசாந்த்(23) என்பது தெரியவந்தது. இந்த விபத்துகள் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tirupati ,Katpadi, Tirupati ,
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது