சீர்காழி, டிச.15: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஊனமுற்றவர்கள் மற்றும் கடும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சுரேஷ்குமார் வைத்தீஸ்வரன் கோயில் செயலாளர் முருகன், நகர தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 39 மாற்றுத்திறனாளிகளை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.