×

பென்னாகரத்தில் 17ம் தேதி நடக்க இருந்த மக்கள் குறைதீர் முகாம் ஒத்திவைப்பு

தர்மபுரி, டிச.15: தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், வரும் 17ம் தேதி அன்று காலை பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஏரியூர் ராமசாமி கவுண்டர் பொன்னாம்மாள் மண்டபத்திலும், நண்பகல் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட  முத்துகவுண்டர் திருமண மண்டபம் மற்றும் மாலை பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுவதாக இருந்த சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மட்டும், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (15ம் தேதி) மற்றும் 16ம் தேதி ஆகிய 2 நாட்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி, சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெறும். இச்சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில், அந்தந்த வட்டங்களுக்குட்பட்ட  பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக நேரில் வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags : Pennagaram ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...