×

புதுச்சேரியில் புதிதாக 24 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, டிச. 15: புதுச்சேரியில் புதிதாக 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 2,543 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-21, காரைக்கால்-1, மாகே-2 பேர் என மொத்தம் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை. மேலும், புதுச்சேரியில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1,878 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. இதுவரை 20,14,218 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 17,09,361 நெகட்டிவ் என முடிவு வந்துள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,29,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 18 பேரும், அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 17 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 136 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 177 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,27,193 (98.41 சதவீதம்) ஆக உள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 13,14,772 பேருக்கு (2வது டோஸ் 5,14,515 உள்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Pondicherry ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...