×

கும்மிடிப்பூண்டியில் நெகிழ்ச்சி 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய அரசு பள்ளி மாணவர்கள்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் 1995ம் ஆண்டு 10ம் வகுப்பில் 117 மாணவர்கள் படித்தனர். இந்த மாணவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முன்னாள் மாணவர்கள் அமைப்பை ஏற்படுத்தி தங்கள் நட்பை வளர்த்துக்கொண்டனர். தொடர்ந்து இவர்கள் கே.எல்.கே. அரசு மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்த 25வது ஆண்டை நினைவு கூறும் வகையில் அனைவரும் ஒன்று கூட முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் தனியார் மண்டபத்தில் 117 முன்னாள் மாணவர்கள் அவர்களது குடும்பத்தாரோடு ஒன்றுகூடி நெடுநாள் கழித்து இந்த சந்திப்பை ஒரு திருவிழாவைப்போல் கொண்டாடினர். பின்னர் முன்னாள் மாணவர்களின் குடும்பத்தாருக்கு முன்னாள் மாணவர்கள் குழு சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த மாணவர்களோடு கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த டேனிஷ் என்ற மாணவர் படித்தார். அவர் தற்போது மேட்டுப்பாளையத்தில் மருத்துவராக பணிபுரிகிறார். அவர் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தனது கல்விக்காக மாணவர்கள் உற்சாகப்படுத்திய நினைவுகளை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கே.எல்.கே. அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள மேற்கூரை அமைக்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குழுவை சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன், விஜயசங்கர், ஜோதிலிங்கம், எழிலன், மதன்மோகன்,  சரவணன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர்  செய்திருந்தனர்.

Tags : Gummidipoondi ,
× RELATED சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை...