×

கண்மாய்க் கரைகளை பலப்படுத்த வேண்டும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

விருதுநகர், டிச. 14: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பாவாலி கிராம விவசாயிகள் சார்பில் வடிவேல் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாவாலி கிராம கண்மாயின் இரண்டு மடைகளும் இடிந்த நிலையில் உள்ளது. இதனால், மழை பெய்தும் கண்மாய் நிறையாமல் உள்ளது. இரண்டு மடைகளை இடித்து புதிதாக கட்ட வேண்டும். கலுங்கில் இருந்து பாவாலி பாலம் வரை கரைகளை பலப்படுத்த வேண்டும். 30 ஆண்டுகளாக கரைகளை பலப்படுத்த கூறி உரிய நடவடிக்கை இல்லை. கலுங்கில் நீர் வரத்து கால்வாய் சீனியாபுரம் பொதுப்பணித்துறை கண்மாய் ஷட்டர் வரை கால்வாயை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும்.

கால்வாய் மேற்கு பகுதியில் சீனியாபுரம் கிராமம் மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளதால் கரைகளை சரி செய்து கொடுக்க வேண்டும்.பாவாலி கண்மாய் வரத்து கால்வாயை குவாரி உரிமையாளர்கள் வண்டிப் பாதையாக பயன்படுத்தி வருவதால் சரள் மண்ணை கொட்டு மேடாக்கி விட்டதால் கண்மாய்க்கு நீர் வரத்து தடைப்பட்டுள்ளது.  வரத்து கால்வாயை வண்டிப்பாதையாக பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Tags : Kanmai ,
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாயில்...