சென்னை, டிச.14: இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் வழக்கறிஞர் ம.தி.சோழர் மறைவுக்கு, முத்தரசன் இரங்கல் தெரி வித்துள்ளார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப் பின ரும், திருச்சி மாவ ட்ட முன் னாள் செய லாள ருமான வழக்கறிஞர் ம.தி.சோழர் (76). கல் பாக்கத்தில் உள்ள அவரது மகள் வீட்டில் கால மானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். அவர் கல்லூரி பயின்ற காலத்தில் மாணவர் பெரு மன்றத்தில் இணைந்து, அதன் வழியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, இறுதி மூச்சு வரை செயலாற்றியவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1987-88ம் ஆண்டுகளில் அமைப்புரீதியான நெரு க்கடியை சந்தித்த போது, அதனை எதிர்கொண்டு கட்சியை பாதுகாப்பதில் முனைந்து செயல்பட்டு வெற்றி கண்டவர். 1989ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை முன்னி ன்று நடத்தியவர். கடந்த சில மாதங்களாக உடல் நலன் பாதிக்கப் பட்டிருந்த ம.தி.சோழர், கல்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகி விட்டார் என்பது வேதனையாகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.