×

முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்

முத்துப்பேட்டை,டிச.14: முத்துப்பேட்டையை அடுத்த பின்னத்தூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 28வது மாநாடு கண்ணுசாமி தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர், முன்னாள் எம்எல்ஏ சிவபுண்ணியம் கலந்துக்கொண்டு பேசினார். இதில் பின்னத்தூரில் பழுதடைந்த கிராமப்புற சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாநில குழு உறுப்பினர் சந்திரசேகர ஆசாத், ஒன்றிய செயலாளர் முருகையன் உள்ளிட்டோர் பேசினர். இதில் புதிய பொறுப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pinnathur ,Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...