×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நெல்லை, டிச. 14: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லையில் மாநகர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். அவைத்தலைவர் மாடசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் பூக்கடை மாரியப்பன், சின்னத்துரை, லாலா பாரதி முன்னிலை வகித்தனர். இதில் இளைஞரணி செயலாளர்  எம்.எஸ்.முருகன், பகுதி செயலாளர்கள் வால்ஸ்ஷேக், சரவணன், மணிகண்டன், தலைமை  செயற்குழு உறுப்பினர் கலைவாணன்,


பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், விஜயகாந்த் மன்ற ஒருங்கிணைப்பாளர் தேவராஜ், மாவட்ட பிரதிநிதி வேலாயுதம், மானூர் ஒன்றிய பொருளாளர் இருதயராஜ் மற்றும்  நிர்வாகிகள் சொரிமுத்து, முருகன், வேல்முருகன், கோபிநாத கணேஷ், பேச்சிதுரை, வேல்பாண்டி, கார்த்திகேயன், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி,  தெற்கு ஒன்றிய பகுதி ெசயலாளர் வேல்பாண்டி, அவைத்தலைவர் பாபுராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு வழங்கப்பட்டது. விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி செய்வது குறித்தும், வார்டுகளில் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனு சமர்ப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்ேவறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags : Urban Local ,Election ,Temujin ,Administrators ,
× RELATED ஒட்டன்சத்திரம் நகராட்சியில் தொழில் உரிம வரிகளை புதுப்பிக்க வேண்டுகோள்