×

மின்னல் தாக்கி இறந்த பெண்களின் குடும்பத்திற்கு நிவாரணம் கலெக்டரிடம் மனு

நெல்லை, டிச.14:  நெல்லை அருகே நடராஜபுரத்தில் மின்னல் தாக்கி இறந்த பெண்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலப்பாளையம் நடராஜபுரத்தை சேர்ந்த வீ.முருகன் கலெக்டரிடம் நேற்று அளித்த மனு: மேலப்பாளையம் 44வது வார்டில் குடியிருந்து வரும் எனக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். கடந்த 5ம் தேதி எனது மனைவி முத்துமாரி, என் தாய்மாமன் முருகன் என்பவரின் மனைவி பாலேஸ்வரி ஆகியோர் கருங்குளம் அருகே வயலில் நாற்று நடும்போது மின்னல் தாக்கி இறந்தனர்.  

எனது குடும்பத்தை காப்பாற்ற எவ்வித வழியும் இல்லை. எனது 2 பெண் குழந்தைகளுக்கான படிப்புச் செலவையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு அரசு வேலை தந்து உதவுவதோடு, நிவாரணமும் வழங்கிடுமாறு கேட்டு கொள்கிறேன்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மின்னல் தாக்கி இறந்த பாலேஸ்வரியின் கணவர் வே.முருகன் என்பவரும் கலெக்டரிடம் மனு அளித்தார்.

Tags : Family of ,Died ,Lightning ,
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்