×

பள்ளத்தூரில் முற்றுகை எதிரொலி: அங்கன்வாடி மையத்தில் 5 குழந்தைகள் உடனடி சேர்க்கை

கே.வி.குப்பம், டிச.14:கே.வி.குப்பம் அடுத்த பனமடங்கி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளத்தூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கடந்த 11ம் தேதியன்று அங்கன்வாடி மையத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் மைதிலி போனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில், நேற்று பள்ளத்தூர் அங்கன்வாடி மையத்திற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் மைதிலி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கன்வாடி அமைப்பாளர் சரஸ்வதியிடம் குழந்தைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் சேர்க்கை இல்லை என்று கூறவேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த குழந்தைகளின் பெற்றோர்களை அழைத்து முதலாவதாக 5 குழந்தைகளுக்கு மட்டும் உடனடி சேர்க்கை நடைபெற்றது.

அப்போது அங்கிருந்த பொதுக்கள் கூடுதலாக அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு, திட்ட இயக்குனர் அனைத்து குழந்தைகளை சேர்க்கவும், இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags : Pallathur ,Anganwadi Center ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்