×

பேரணாம்பட்டு- வீ.கோட்டா சாலையில் சோதனை: திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த போலீசார்

குடியாத்தம், டிச.14: பேரணாம்பட்டு- வீ.கோட்டா சாலையில் திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து பைக் மற்றும் 8 சவரனை பறிமுதல் செய்தனர். குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி உத்தரவின்பேரில், நேற்று பேரணாம்பட்டு- வீ.கோட்டா சாலையில் பேரணாம்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு பைக்கை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால், பைக்கை வாலிபர் நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதையடுத்து, போலீசார் அரை கி.மீ தூரம் விரட்டிச்சென்று பைக்கை தடுத்து நிறுத்தினர். பின்னர், பைக்கில் இருந்த 3 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், வாணியம்பாடியை சேர்ந்த சுவேல்(26), ஓமகுப்பம் பகுதியை சேர்ந்த மணி(22), பேரணாம்பட்டை சேர்ந்த இம்ரான் அகமத்(22) என்பதும், பல்வேறு திருட்டு வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு பைக் மற்றும் 8 சவரன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Peranampattu ,V.Kotta ,
× RELATED வேனுடன் 210 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி,...