×

மாதாந்திர பராமரிப்பு பணி எதிரொலி அன்னவாசல், இலுப்பூர் பகுதியில் இன்று மின் தடை

விராலிமலை, டிச. 14: புதுக்கோட்டை மாவட்டம் வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளத்தாடிப்பட்டி, சித்தாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.15 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதேபோல் இலுப்பூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளிஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. பாக்குடி துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னவாசல் பேருராட்சிக்குட்பட்ட பகுதி, செங்கப்பட்டி, காலாடிபட்டி,முக்கண்ணாமலைபட்டி, புதூர்,தச்சம்பட்டி, வெள்ளாஞ்சார், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல்,பிராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்னிமுத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

Tags : Iluppur ,
× RELATED இலுப்பூர் அடுத்த மேலப்பட்டியில்...