×

ஜெயங்கொண்டம் அருகே செவிலியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

ஜெயங்கொண்டம், டிச.14: ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் செவிலியர் வீட்டில் பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் 5வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் மாணிக்கம் மகன் பழனிசெல்வன் (55). இவரது மனைவி புனிதா. இவர் மன்றத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அன்று சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று காலையில் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் புனிதாவின் வீடு முன் கதவு, பின்புற கதவு அறைக்கதவுகள் அனைத்தும் திறந்து கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக பழனி செல்வன் புனிதாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வீட்டிற்கு வந்த பழனி செல்வன் வீட்டில் உள்ள அனைத்து பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் பழனி செல்வன் தனது அண்ணன் 60வது திருமணத்திற்காக செலவு செய்வதற்காக வைத்திருந்த ரூ.70 ஆயிரம் மற்றும் வளையல், தோடு, செயின், கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட 43 பவுன் நகைகள் இருந்ததாகத் தெரிகிறது பழனி செல்வன் மனைவி புனிதா ஆகியோர் சென்னையில் இருந்து ஊருக்கு வந்து கொண்டு உள்ளனர். அவர்கள் வந்தால்தான் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் நகை முழுவிபரம் தெரியவரும். இதுகுறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Jayankondam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது