சீர்காழி, டிச.14: சீர்காழியில் உலக நன்மை வேண்டி விஸ்வாஸ் சத்சங்கம் சார்பில் விஷ்ணு சகஸ்ரநாமம் மகாமந்திரம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகாபாரதத்தில் பீஷ்மர் தருமருக்கு உபதேசித்ததே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். தேவி, பூதேவி சமேத விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அதன்படி பக்தர்கள் ஒன்றிணைந்து சகஸ்ரநாமம் பாராயணம் நடந்தது. முன்னதாக திருஇந்தளூரில் இருந்து கொண்டுவரப்பட்ட தேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சகஸ்ரநாமம் முற்றோதல் தொடங்கியது. டாக்டர்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.