×

தாந்தோணிமலை வெங்கடேஸ்வரா நகரில் சாக்கடை வடிகாலை அகலப்படுத்த ேகாரிக்கை

கரூர், டிச. 14: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை வெங்கடேஸ்வரா நகர்ப்பகுதிகளில் சாக்கடை வடிகாலை அகலப்படுத்த வேண்டும் என பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் தாந்தோணிமலை இடையே வெங்கடேஸ்வரா நகர்ப்பகுதிகள் உள்ளன. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. இந்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட வடிகால்கள் தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது.

சாக்கடை வடிகால்கள் அதிக ஆழத்துடன் இல்லாத காரணத்தினால் தொடர்மழையினால் மழைநீருடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி விட்டது. இதனால் இந்த பகுதிகளில் வடிகால்களை சீரமைத்து புதிதாக அமைத்து தர வேண்டும் என பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் தாழ்வான நிலையில் உள்ள வடிகால்களை விரைந்து சீரமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thanthonimalai Venkateswara town ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு