×

இரணியல் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி

திங்கள்சந்தை, டிச. 14: இரணியல் அருகே தலக்குளம் தும்பவிளை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (30). பெயின்டிங் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தலக்குளத்தில் இருந்து திங்கள்நகருக்கு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். புதுவிளை அருகே வந்த போது, எதிரே அதே பகுதியை சேர்ந்த அஜித் (27) என்பவர் ஓட்டி வந்த பைக், சுபாஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுபாஷ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் காயமடைந்த அஜித்தை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.

பின்னர் சுபாஷை மேல்சிகிச்சைக்காக டாக்டர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுபாஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுபாஷின் சகோதரன் அசோக் (37) கொடுத்த புகாரின் பேரில், இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இறந்து போன சுபாஷுக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.

Tags : Iraniyal ,
× RELATED இரணியல் அருகே அடுத்தடுத்து வாகனங்கள்...