×

அருண் நேரு பிறந்தநாள் மிளகாய்ப்பொடி தூவி தனியார் பைனான்ஸ் ஊழியரை வெட்ட முயன்ற 3 பேருக்கு வலை திருவெறும்பூர் அருகே பரபரப்பு

திருவெறும்பூர், டிச.13: திருவெறும்பூர் அருகே தனியார் பைனான்ஸ் ஊழியரை மிளகாய்ப்பொடி தூவி வெட்ட முயன்ற வழக்கில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே மேலகல்கண்டார்கோட்டை மணியம்மை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டமுருகன்(22), தனியார் பைனான்ஸ் ஊழியர். இந்நிலையில் இவர் நேற்று மதியம் தனது நண்பர் மேலகல்கண்டார்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்த இளந்தமிழ்(21) என்பவருடன் பைக்கில் ஆலத்தூர் ஆஞ்சநேயர் கோயில் பஸ் நிறுத்தம் அருகே வந்தார். அப்போது மணிகண்டமுருகனுக்கு தெரிந்த ஆலத்தூர் பூங்கோயில் தெருவை சேர்ந்த ஆகாஷ்(24), மேலகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த சரத்(20) மற்றும் ஒருவர் அவரை அழைத்துள்ளனர்.

இதையடுத்து மணிகண்டமுருகன் பைக்கை நிறுத்திவிட்டு சென்றபோது ஆகாஷ், சரத் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து மணிகண்டமுருகன் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அரிவாள் கொண்டு வெட்ட முற்பட்டனர். அப்போது மணிகண்ட முருகன் அந்த பகுதியில் உள்ள கால்வாயில் குதித்து தப்பி ஓடியுள்ளார். இதைத் தொடர்ந்து நண்பர் இளந்தமிழும் அங்கிருந்து ஓடிவிட்டார். தகவலறிந்து அங்கு வந்த பொன்மலை போலீசார் சம்பவம் நடந்த இடம் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதி என்பதால் உடனடியாக அங்கு தகவல் கொடுத்தனர். திருவெறும்பூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு, கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags : Arun Nehru ,Thiruverumbur ,
× RELATED திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து...