×

சிட்கோ மனைகளின் விலை குறைப்பு: முதல்வருக்கு கப்பலூர் தொழிலதிபர்கள் நன்றி

திருமங்கலம், டிச. 13: தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகமான சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள மனைகளின் விலையை குறைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தலைவர் ரகுநாதராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகமான சிட்கோவால் உருவாக்கப்பட்ட பல்வேறு தொழிற்பேட்டைகளில் உள்ள மனைகளின் விலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கணிசமாக குறைத்துள்ளது. இதற்கு முதல்வருக்கு நன்றிகள். இந்த மனை விலைகுறைப்பானது அந்தந்த மாவட்டங்களில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும். அதே நேரத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள மூன்று தொழிற்பேட்டைகளிலும் இடங்கள் இல்லை. தொழிற்பேட்டைகள் நிரம்பிவிட்டன.

இடப்பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான தொழில்கள் தொழிற்பேட்டைகளில் இடம் இல்லாதததால் நகர் பகுதிகளில் இயங்கிவருகின்றன. எனவே, மதுரை மாவட்டத்தில் புதியதாக தொழிற்பேட்டைகள் அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : CIDCO ,
× RELATED கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி...