×

முத்துப்பேட்டை அருகே வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் பலி

முத்துப்பேட்டை,டிச.13: முத்துப்பேட்டை அருகே வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் பலியானார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை மேலக்காடு சேது ரோட்டில் வசிப்பவர் சுப்பிரமணியன்(70). இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் சுப்பிரமணியன் வீட்டின் அருகில் வாய்க்காலில் குளிக்க சென்றபோது குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்து மிதந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...