×

முதல்சேத்தி அங்கன்வாடிக்கு நிரந்தர கட்டிடம் வேண்டும்

மன்னார்குடி, டிச. 13: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்சேத்தி ஏ கிளை மாநாடு மாவட்ட குழு உறுப்பினர் மீனாம்பிகை, நகர செயற்குழு பக்கிரிசாமி ஆகியோர் தலைமை யில் மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் நேற்று நடை பெற்றது. மாநாட்டு கொடியினை நகர செயலாளர் கலைச்செல்வன் ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபியை மாவட்ட குழு ரெத்தினகுமார் திறந்து வைத்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் வை. செல்வராஜ், நகர துணை செயலாளர் தனிக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிவபுண்ணியம் மாநாட்டை துவக்கி வைத்து தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேசினார்.
மாநாட்டில், முதல்சேத்தியில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் அங்கன் வாடிக்கு நிரந்தர கட்டிடம் கட்டி தர வேண்டும். வீட்டு மனை இல்லாதவர்கள் குறித்து உரிய கணக்கீடு எடுத்து அவர்களுக்கு வீட்டு மனைகளை வழங்க வேண்டும். பட்டா இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும். மேலத்தெரு, கீழத்தெரு மற்றும் ஜீவா நகரில் கழிவு நீர் வடிகால் வாய்க்கால் கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கிளை செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags : Sethi Anganwadi ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு