×

திமுகவினரை அதிகாரி சமரசம் தஞ்சையில் தபால்நிலைய பெண் ஊழியரிடம் நகை பறிப்பு


தஞ்சை, டிச. 13: தஞ்சை மாவட்டம் திருவையாறு ஈச்சக்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சரண்யா(30), தஞ்சை தலைமை தபால்நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து கிளம்பி திருவையாறு பஸ்டாப்பில் நின்று, பின்னர் தஞ்சை ரயிலடியில் இறங்கி தலைமை தபால்நிலையம் வந்தார். அங்கு வந்து விட்டு பார்த்தபோது கழுத்தில் இருந்த 5பவுன் தாலிச்செயினை காணவில்லை. இதுகுறித்த சரண்யா தஞ்சை கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாலிச்செயின் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : DMK ,Thanjavur ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி