×

திருவரங்குளத்தில் அமைச்சர் தகவல் மணமேல்குடி அருகே மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

அறந்தாங்கி, டிச. 13: மணமேல்குடி அருகே மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மணமேல்குடி காவல் நிலைய ஆய்வாளர் சாமுவேல்ஞானம் மணமேல்குடியை அடுத்த செல்லப்பன்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வெள்ளாற்றில் இருந்து அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை தலா கால் யூனிட் மணலுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தியதாக காட்டுக்குடியைச் சேர்ந்த முத்துராமன், செந்தில்குமரன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முத்துராமன் மற்றும் செந்தில்குமரனை கைது செய்தனர்.

Tags : Manamelkudi ,Thiruvarangulam ,
× RELATED புதுக்கோட்டையில் சாலையில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி