கரூர், டிச. 13: கும்மிருட்டாக காணப்படும் கோடங்கிபட்டி சாலையில் தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் திருச்சி பைபாஸ் சாலையோரம் கோடங்கிப்பட்டி பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சாலை செல்கிறது. கரூரில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் அதிகளவு சென்று வருகிறது. இந்நிலையில், கோடங்கிப்பட்டி பகுதியில் இருந்து, ஈசநத்தம் செல்லும் சாலையில் பத்தாம்பட்டி பகுதி வரை சாலையின் இருபுறமும் தேவையான அளவு தெரு விளக்கு வசதி குறைவு காரணமாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு இடையேதான் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, இந்த சாலையில் குறிப்பிட்ட தூரம் வரை கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் கூடுதலாக தெரு விளக்கு வசதி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.