×

(வேலூர்) மணல் கடத்திய 2 வாலிபர்கள் கைது

குடியாத்தம், டிச.11: குடியாத்தம் அடுத்த சீவூர் பகுதியில் ஆற்று மணல் கடத்துவதாக டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிஎஸ்பி ராமமூர்த்தி உத்தரவின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி, சோதனை செய்ததில் ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்த பயன்படுத்திய ஆட்டோ மற்றும் 30 மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மணல் கடத்தியது தொடர்பாக குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை பகுதியை சேர்ந்த சாதிக்(33), போடிபேட்டை பகுதியை சேர்ந்த நேதாஜி(22) ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Vellore ,
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை