×

வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் தண்ணீர் நிறுத்தம்

வத்திராயிருப்பு, டிச. 11: வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் என்ற இடத்தில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன அணைகள் பெரியாறு அணையின் மொத்த உயரம் 47.56 அடி. தற்போது உள்ள நீர்மட்டம் 26.08 அடி. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 78.55 கன அடி வீதம் வருகிறது. அணையிலிருந்து வினாடிக்கு 153 கனஅடி வீதம் வௌியேறுகிறது. கோவிலாறு அணையின் மொத்த உயரம் 42.64 அடி. தற்போது உள்ள நீர்மட்டம் 33.53 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 133.76 கன அடி வீதம் வருகிறது.

அணையிலிருந்து வினாடிக்கு 170 கன அடி வீதம் வௌியேறுகிறது. கடந்த மாதம் 21ம் தேதி அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து  விட்டனர். இதனையடுத்து நேற்று வரை அணைகளிலிருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், அணைகளில் நேற்று தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின் காரணமாக ஓடைகளில் தண்ணீர் அதிகரித்து கண்மாய்களுக்கு வருவதால் நேற்று அணைகளில் தண்ணீரை நிறுத்தம் செய்யப்பட்டது.

Tags : Periyar ,Kovilaru dams ,Vatriyiruppu ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...