கோபால்பட்டி, டிச. : சாணார்பட்டி அருகே, கம்பிளியம்பட்டியில் கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ், மருத்துவ முகாம் நடைபெற்றது. கிராம பஞ்சாயத்து தலைவர் விஜயவீராச்சாமி தலைமை வகித்தார். இதில், சாணார்பட்டி ஒன்றிய தலைவர் பழனியம்மாள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவவர் அருள் கலாவதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரோஜினி, ஒன்றியக் கவுன்சிலர் அமிர்ததர்சினி ராஜா, துணைத்தலைவர், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில், ‘பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, இசிஜி, பள்ளிக் குழந்தைகளுக்கு கண் குறைபாடு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்தனர். கவில்கொசவபட்டி மற்றும் சிலுவத்தூர் ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
கம்பிளியம்பட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்து, கண்ணாடி வழங்கப்பட்டது. மேலும் கருவுற்ற தாய்மார்களுக்கு மருத்துவப் பெட்டகங்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் கம்பிளியம்பட்டி சுற்றுவட்டாரப் பொதுமக்கள், ஊராட்சி செயலாளர் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.